என் மலர்
நீங்கள் தேடியது "ஒகேனக்கல் காவிரி ஆறு"
- மழை நீரும் கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் பிடிப்பு பகுதியில் இருந்தும் பெருக்கெடுத்து ஓடின.
- தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததால் காவேரி ஆறு முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம் , ஒகேனக்கல் காவேரி ஆறு வற்றாத ஜீவநதி ஆகவும் டெல்டா பாசன விவசாயிகளின் துயர் துடைக்கும் காவிரி ஆக குடகு மலையிலிருந்து தஞ்சை வரை நெற்களஞ்சியங்களின் ஜீவனாக விளங்கி வருகிறது.
இந்த ஆண்டு காவிரி ஆற்றில் சுமார் 140 நாட்களுக்கும் மேலாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் அதிக அளவிலான உபரிநீரும், மழை நீரும் கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் பிடிப்பு பகுதியில் இருந்தும் பெருக்கெடுத்து ஓடின.
வரலாறு காணாத தொடர் வெள்ளப்பெருக்கு காவிரி ஆற்றில் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த நிலை மாறி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி மட்டுமே தண்ணீர் வரத்து இன்று காலை முதல் காணப்படுகிறது.
இதன் காரணமாக ஆலம்பாடி ஒகேனக்கல் ஊட்டமலை உள்ளிட்ட பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து குட்டை போல் தேங்கி உள்ளது. தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததால் காவேரி ஆறு முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.
தொடர் நீர்வரத்து காலங்களில் காவிரி ஆற்றில் பாறைகள் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு தண்ணீர் மூழ்கடித்து சென்ற பகுதியில் அனைத்தும் தற்பொழுது வறண்டு பாறைகள் மட்டுமே தெரியும் நிலை மாறி உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 6-ம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுடைய மகள் பூஜா (வயது 11). கூத்தப்பாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பூஜா 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முனுசாமி தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் சென்றார். அங்குள்ள அருவி, முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.
பின்னர் ஊத்துமலை பரிசல்துறைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். பூஜாவும் ஆற்றில் இறங்கி குளித்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக பூஜா தண்ணீரில் மூழ்கினாள். இதை அறிந்த முனுசாமி பதறி துடித்தார். மகளை காப்பாற்றும்படி சத்தம் போட்டார். அதற்குள் பூஜா ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டாள். இதுபற்றி ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும், பரிசல் ஓட்டிகளும் அங்கு வந்து ஆற்றில் பூஜாவை தேடினர். சிறிது தூரத்தில் பூஜா உடலை கண்டு எடுத்தனர். காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி அவள் பலியானது தெரியவந்தது. உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஒகேனக்கல்:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்துள்ள நடு வேட்டந்தன்பட்டியை அருணாசலம். இவருடைய மகன் நவீன் (வயது18). இவர் வேலூரில் உள்ள தனியார் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நவீன் மற்றும் அவருடைய உறவினர்கள் கடந்த 27-ந் தேதி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஊட்டமலை பரிசல் துறைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் நவீன் உறவினர்களுடன் குளித்தபோது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நவீனை தேடும் பணியில் பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக ஈடுபட்டனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. பின்னர் இன்று காலை 3-வது நாளாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நவீனின் உடல் ஊட்டமலை பரிசல் துறை அருகே கிடைத்தது. உடனே நவீனின் உடலை பரிசல் ஓட்டிகள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
கர்நாடகாவில் கபினி அணை நீர்பிடிப்பு பகுகளில் கடந்த வாரம் பெய்த மழையால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 81 அடியை தாண்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 24-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால் 18 ஆயிரத்து 428 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
இதற்கிடையே கர்நாடகாவில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து 3919 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 7500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3500 கன அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேலும் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.
ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தும், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரி சென்றும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 9516 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6912 கன அடியாக இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 55.82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 56.59 அடியாக உயர்ந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.






